சூடான செய்திகள் 1

மாதம்பிட்டி – ரஜமல்வத்த சந்தி வரையான பகுதிக்கு தற்காலிக பூட்டு

(UTV|COLOMBO)-முகத்துவாரம் , மாதம்பிட்டி வீதி சந்தியில் இருந்து ரஜமல்வத்த சந்தி வரையான பகுதி இன்று(15) இரவு 9 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை இரவு 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

நீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக குறித்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி , முகத்துவாரம் ஊடாக கொழும்பிற்கு பிரவேசிக்கும் வாகனங்கள் ரஜமல்வத்த சந்தியில் இடது புறம் திரும்பி அளுத் மாவத்தைக்கு பயணிக்க முடியும் எனவும், முதுவெல்ல மாவத்தையில் இருந்து வௌியேறுவதற்காக வரும் வாகனங்கள் கனுவ சந்தியின் வலது புறமாக அளுத் மாவத்தை ஊடாக மாதம்பிட்டி சந்தியில் இடது புறம் திரும்பி பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


Related posts

பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்

இன்று முதல் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பிரதேச சபையின் உறுப்பினர்