சூடான செய்திகள் 1

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

(UTV|COLOMBO)  நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டீசல் 4 ரூபாவாலும், சுப்பர் டீசல் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐஓசி தெரிவித்துள்ளது.

92 ஒக்டைன் பெற்றோல் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

படைப்புழுக்களின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள்…

அறுவைக்காட்டு பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பாராளுமன்றில் பேச்சு : இரு வார காலத்திற்குள் பாதிப்புக்களை சமர்ப்பிக்குமாறு மக்களிடம் பிரதமர் வேண்டுகோள்…

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்