சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை

(UTV|COLOMBO) நிலவுகின்ற மழையுடன் கூடிய வானிலையில் இன்றும், நாளையும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் திருகோணமலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்