சூடான செய்திகள் 1

2019ம் ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம்

(UTV|COLOMBO)-2019ம் ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம் கனேகொட ஆரம்ப வித்தியாலயத்தில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆ.எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த தேசிய வைபவத்திற்கு இணைவாக நாட்டின் ஏனைய பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வைபவங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

தற்பொழுது பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்குவதற்கான பணிகள் பூர்த்தியடைந்திருப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆ.எம்.எம். ரத்னாயக்க தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

கிழக்கு ஆளுநரின் இப்தார் காத்தான்குடியில்!

பேண்தகு அபிவிருத்தி திட்டத்திற்கு வலுசேர்க்க பொதுநலவாய நாடுகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

அமைச்சர் ரிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை அடிப்படையற்றது: முசலி பிரதேச சபை ஏகமனதான கண்டனத் தீர்மானம்!