விளையாட்டு

ஓய்வு பெற தீர்மானித்துள்ள அண்டி மரே

பிரித்தானியாவின் டென்னீஸ் வீரர் அண்டி மரே இந்த வருடத்துடன் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடருடன் தாம் ஓய்வு பெறுவது குறித்து சிந்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சில வேளைகளில அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரே தமது இறுதி தொடராக இருக்கலாம் என்று கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் அவுஸ்திரேலிய பகிரங்க தொடரில் கலந்துக் கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள மரே, மெல்பேர்னில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, தாம் விம்பில்டன் தொடருடனேயே ஓய்வுப் பெற எத்தனித்திருக்கின்ற போதும், அதுசாத்தியப்படுமா என்று தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

தனுஷ்கவின் நடத்தை பற்றி மஹேல

ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில்

சென்னையை வீழ்த்தியது டெல்லி