சூடான செய்திகள் 1

டெங்கு நோய் மீண்டும் பரவும் அபாயம்

(UTV|COLOMBO)-நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையுடன், மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்று என சந்தேகிக்கப்படும் 48 ஆயிரத்து 669 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுள் நூற்றுக்கு 37 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டில் டெங்கு தொற்று என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 101 பேர் பதிவாகியிருந்தனர்.

இந்தநிலையில், நுளம்பு பெருகும் வகையில் உள்ள இடங்களை சுமத்தம் செய்து பேணிவருமாரு சுகாதார பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

 

Related posts

அநியாயமாக சிறையில் வாடிய ரம்ஸி ராசிக் – முழுமையாக விடுதலையானார்

வவுனியா – கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலின் பெட்டிகள் விலகல்

கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் 18 மணி நேரம் நீர் விநியோக தடை