சூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த வாரத்தில் பெறுபேறுகள் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சு மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் என பரீ்டசைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு 20,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 

Related posts

இலங்கை வைத்திய சங்கத் தலைவர் இராஜினாமா

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரர் சிறைச்சாலையில் இருந்து வெளியேறினார்