சூடான செய்திகள் 1

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலா பேச்சுவார்த்தையொன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இரவு 07.00 மணியளவில் இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறினார்.

 

 

 

Related posts

சுகாதார அமைச்சருக்கு எதிராக பத்து இலட்சம் கையெழுத்துகள்

வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் நாளை…

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கரு ஜயசூரிய?