சூடான செய்திகள் 1

அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதேதாகும்

(UTV|COLOMBO)-தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதாகும் என மல்வத்தைப் பீடத்தின் அனுநாயக்கர் அதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சபாநாயகரின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பாரபட்சமானதாக அமைந்திருப்பதாகவும் அனுநாயக்கர் தெரிவித்தார். அவர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றினார்.
சபாநாயகரின் செயற்பாடுகளால் நிறைவேற்று அதிகாரப்பீடத்திற்கும்சட்டவாக்க சபைக்கும் இடையில் முறுகல் நிலையை தோன்றுவிக்கலாம்
இதனால் முனவைக்கப்படும் வௌ;வேறு கருத்துக்களால் மக்கள் குழப்பமடையவும் நேரிடும். இதற்காகவே பொதுத் தேர்தல் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோருவதாக அதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

Related posts

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்

ரயில் எஞ்சின், சொகுசு பெட்டிகள் அடங்கிய தொகுதி கொள்வனவு

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்