சூடான செய்திகள் 1

கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் 18 மணி நேரம் நீர் விநியோக தடை

(UTV|COLOMBO)-நாளை சனிக்கிழமை காலை எட்டு மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணி வரை 18 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்.

இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவல மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும்; மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும், இரத்மலானை சொய்சாபுர பிரதேசத்திலும் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்று தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

 

 

Related posts

டோனியால் தொடர்ந்து விளையாட முடியுமா? – கிரிக்கெட் வாரியம்

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக ‘பனை நிதியம்’ என்ற புதிய திட்டம்