சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சு.கட்சியின் தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை(13) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக கட்சி செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 341 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் கட்சி செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

இன்று நள்ளிரவுடன் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு…

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக பல போராட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் – தென்னகோன்

பாராளுமன்றினை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை(05) வரை ஒத்திவைப்பு