சூடான செய்திகள் 1

பொலிஸ் உயர் அதிகாரிகளின் விஷேட கலந்துரையாடல் இரத்து-பொலிஸ் மா அதிபர்

(UTV|COLOMBO)-இன்று (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொலிஸ் உயர் அதிகாரிகளின் விஷேட கலந்துரையாடல் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்களை பொலிஸ் தலைமையாகத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபர் நேற்று (04) காலை உத்தரவிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் நேற்று மாலை மீண்டும் பொலிஸ் மா அதிபரினால் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த கலந்துரையாடலுக்காக வேறு தினத்தை விரைவில் வழங்குவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெறுகின்ற மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியின் காரணமாக இந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

போதைப்பொருள் ஒழிப்பிற்காக சிங்கப்பூரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகள்

வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதல் அமுலில்…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பம்