சூடான செய்திகள் 1

சரத் குமார குணரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 06 பேருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 12ம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குறித்த முறைப்பாடு சம்பந்தமாக பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணையின் பரிந்துரை அறிக்கையை பிரதிவாதி தரப்புக்கு வழங்குமாறும் ஜிதிபதி ஜனாதிபதி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மஹிந்த ராஜபக்,எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் பேச்சுவார்த்தை

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது