சூடான செய்திகள் 1

இடைக்கால அரசாங்கம் குறித்து தீர்மானிப்பது நான்

(UTV|COLOMBO)-தனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ள கருத்துக்கள் பொய்யானவை என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடவில்லை. இடைக்கால அரசாங்கம் அமைப்பது பற்றிய கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக நடந்து கொள்ளுமாறும், இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான தீர்மானத்தை தானே முன்னெடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று முன்தின இரவு(9)  இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இக்கருத்துக்களை மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக GMOA தெரிவிப்பு

தேசிய வைத்தியசாலை தாதி உட்பட இருவருக்கு தொற்றில்லை

ஜனாதிபதித் தேர்தல் – பொலிஸாருக்கு 668 மில்லியன் ரூபா தேவை