சூடான செய்திகள் 1

04ம் திகதியன்று மீண்டும் கூடவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு எதிர்வரும் 04ம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிற்பகல் 3.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதாக தெரிவுக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(28) பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் சாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வு துறையின் பிரதானியான ஓய்வுபெற்ற சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் தெரிவுக்குழுவில் சாட்சியங்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 4 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதானி மற்றும் அரச புலனாய்வு துறையின் பிரதானி ஆகியோர் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற சோகச் சம்பவம்

கொட்டகலை த.ம.வி மாணவிகள் இருவர் 9 எ பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்

சாந்த பண்டார நியமிப்பு தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு