உள்நாடு

வௌிநாடுகளிலிருந்து மேலும் பலர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மேலும் பலர் இன்று (01) நாடு திரும்பியுள்ளனர்.

வௌிநாடுகளில் இருந்து 355 பேர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக கொவிட்– 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கத்தாரிலிருந்து 30 பேரும் மாலைதீவிலிருந்து 35 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 290 பேரும் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளதுடன், இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லெபனான் வெடிப்புச் சம்பவம்- இலங்கை தூதரகத்திற்கு சேதம்

இந்தியாவில் இருந்து வரும் அனைத்து யாத்ரீகர்களும் தனிமைப்படுத்தப்படுவர்

COP: 26 – க்லாஸ்கோ நகரை அடைந்தார் ஜனாதிபதி