உள்நாடு

வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை

(UTV|முல்லைத்தீவு) – முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள புனரவாழ்வு பிரிவிற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ள பகுதியில் நேற்று முன்தினம் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த பகுதியில் நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ் அகழ்வுப்பணியின் போது மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் கிளிநொச்சி பொதுவைத்தியசாலை சட்ட அதிகாரியினால் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைதியற்ற முறையில் நடந்து கொண்டால் சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் – அர்ச்சுனாவுக்கு பிரதி சபாநாயகர் கடுமையாக எச்சரிக்கை

editor

தேரர்கள் இருவர் உட்பட 22 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் ( UPDATE)

ஜனாதிபதி தேர்தல் – சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 108 பேர் கைது – நிஹால் தல்துவ

editor