உள்நாடு

வெளிவிவகார அமைச்சர் நியூயோர்க்கில் ஐ.நாடுகள் பொதுச் சபை அமர்வில்

(UTV |  நியூயோர்க்) – வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது நியூயோர்க் பயணத்தின் போது பல வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார்.

நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் (UNGA) 77ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைக் குழுவை அமைச்சர் அலி சப்ரி வழிநடத்திச் செல்கிறார்.

உக்ரைன் மோதல் மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடிய நிலையில், புத்தாண்டில் இன்று முன்னதாக UNGA கூடியது.

செப்டெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐநா சபையின் 77 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கை சார்பிலான அறிக்கையை வழங்கவுள்ளார்.

Related posts

காலி முகத்திடல் தாக்குதல் : ஐ.நா.ச வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கவலை

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

ராஜிதவுக்கு கொவிட் தொற்று உறுதி