ஒரு பொலிஸ் அதிகாரி வீட்டுக்குள் நுழைந்து ஓர் அறையின் கதவை உதைத்துத் திறக்கும் வீடியோ சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவில் நடந்ததாக பொலிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேம்படி பகுதியில் உரிமம் பெறாத இறைச்சி கூடத்தை நடத்தி வந்தபோது ஒரு சிறிய கன்று கொல்லப்பட்டது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், 24.03.2025 அன்று நெல்லியடி பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனைக்காக பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்றபோது, சந்தேக நபர் வீட்டின் ஓர் அறைக்குள் ஓடிச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.
இதன்போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் கதவைத் திறக்க பலமுறை முயன்றதாகவும் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்கள் வந்து ரவுடித்தனமாக நடந்து கொண்டதாக பொலிஸ் அறிக்கை கூறுகிறது.
வேம்படி துன்னல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார், மேலும் இரண்டு கோடரிகள் மற்றும் ஒரு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபர் திங்கட்கிழமை (24) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட இரண்டு பெண்களும் அன்றைய தினம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
வழக்கு ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது,
மேலும் அந்த நேரத்தில் வன்முறையில் ஈடுபட்ட மற்றைய சந்தேக நபர்களையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.