உள்நாடு

விமான பயணிகளுடன் வரும் நபர்களுக்காக விமான நிலையம் மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர் செல்ல முடியும் என விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக அனுமதி சீட்டினை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அதனை வழங்கும் பகுதி இன்று காலை திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஜனவரி 28 ஆம் திகதி பயணிகளுடன் ஏனையோர் விமான நிலையத்தினுள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே  செயற்படுத்த ஆலோசனை

இன்று முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!

54 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 இல் ஆரம்பம்!