உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் விசேட சோதனை

(UTV|கொழும்பு) – இத்தாலியிலிருந்து வருகைதரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளைய தினம் முதல் விசேட சோதனைக்கு உள்ளக்கப்படவுள்ளனர்.

அத்துடன், தொடர்ந்து 14 நாட்களுக்கு அவர்களை அவதானத்திற்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொற்று நோய்கள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தாலி மற்றும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், இலங்கையர்கள் நாடுதிரும்புவது அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த நடவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

Related posts

தடுப்பூசி செலுத்தி, பரீட்சைகளை நடத்துமாறு கோரிக்கை

மத்திய வங்கி ஆளுநரிடமிருந்து நாளை விசேட அறிவிப்பு

சிங்கப்பூர் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு