உள்நாடு

விமான நிலையங்கள் 22ம் திகதி முதல் திறப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 22ம் திகதி முதல் வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அவதானம் செலுத்தி சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனவரி 22 ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து வர்த்தக விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம். பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடித்து நாட்டை திறக்க வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் – ஜோசப் ஸ்டாலின்.

20 ஆவது அரசியலமைப்பு : 22 ஆம் திகதி பாராளுமன்றுக்கு

நல்லடக்கத்தில் கலந்துகொண்ட பூனை!