சூடான செய்திகள் 1

விமானமொன்றில் திடீர் தீப்பரவல்

(UTV|COLOMBO)-மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை விமாமொன்றினுள் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பின்னர், விமான நிலைய தீயணைப்பு அதிகாரிகளால் குறித்த தீ அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானம் நேற்று தாய்லாந்தில் இருந்து மத்தல விமான நிலையம் வந்துள்ள நிலையில் , இன்று காலை விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பப்பட்டதன் பின்னர் ஓமான் நோக்கி பயணிக்கவிருந்தது.

தீப்பரவல் ஏற்பட்ட இந்த விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அன்டனொவோ -12 ரக விமானம் என தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் தீ விபத்து ஏற்படும் போது விமானிகள் இருவர் உட்பட விமானத்தில் 9 பேர் இருந்துள்ள நிலையில் , தீயினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் [VIDEO]

ரயில் சேவை வழமைக்கு

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு…