உள்நாடு

விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் விசேட உரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றினை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைத்தொழில் மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்றைய சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்

முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்