உள்நாடு

வத்தளையில் நீர் விநியோகம் தடை

(UTV | வத்தளை) – வத்தளையின் சில பகுதியில் இன்று(21) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வத்தளை, எவரிவத்தை, ஹேகித்தை, தெலகபாத, பள்ளியாவத்தை, வெலியமுன, பலகல, எலகந்தை ஆகிய பகுதிகளில் இன்று(21) இரவு 8 மணிமுதல் 24 மணிநேரம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஹேகித்த பகுதியில் நீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜேவிபி முன்னாள் எம்பி சமந்த வித்யாரத்ன கைது

பேக்கரிகளுக்கு பூட்டு

இஸ்ரேல் இலங்கைக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து!