உள்நாடுபிராந்தியம்

லொறியுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து – தாய், மகன் படுகாயம்

நாத்தாண்டி – தங்கொட்டுவ வீதியில் தங்கொட்டுவ, மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று முன்னால் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை – மற்றொரு மாணவனை தேடும் பணி தொடர்கிறது

editor

9 பேர் கொண்ட குழு நியமனம் – வர்த்தமானி வௌியீடு.

மேலும் 305 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்