உள்நாடு

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 10 மாத குழந்தை உட்பட இருவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இரு பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் முதலாம் மற்றும் 21ம் வார்ட்டுக்களில் இருந்த பிள்ளைகளுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

இதில் மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 10 மாத குழந்தை ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அவரது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

விஷத்தன்மையான தேங்காய் எண்ணை தங்கொட்டுவயில்

காற்றாலை மின் திட்டம் – அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம் – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலம் தொடர்பிலான அறிவிப்பு