அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வாப்பா (தந்தை) அல்ஹாஜ்-முகம்மது பதியுதீன் நேற்று (17) இரவு காலமானார்..
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
إِنَّا ِلِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون
புத்தளம், தில்லையடி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ், இன்று செவ்வாய்க்கிழமை (18) அஸர் தொழுகையுடன் பின்னர் புத்தளம், ரத்மல்யாய அல்- காசிமி சிட்டி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அவரது நற்கருமங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, கப்ரை சுவனத்துப் பூச்சோலையாக்கி, மறுமை நாளில் சுவனவாதிகள் கூட்டத்தில் சேர்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றோம். ஆமீன்!
“اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدْ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَما نَقَّيْتَ الثَّوْبُ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ، وَزَوْجاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ،
وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ.”
-ஊடகப்பிரிவு