உள்நாடு

ராணியின் இறுதிச் சடங்கில் இலங்கை ஜனாதிபதியும் கலந்து கொள்வார்

(UTV | கொழும்பு) –  மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி பிரித்தானியா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19ஆம் திகதி கிரேட் பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பேட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் குறிப்பொன்றை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் மக்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

Related posts

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும் – பிரேம்நாத் சி தொலவத்த

editor

காலியில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை