வணிகம்

ரமழான் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை – பாகிஸ்தான் நட்புறவின் அடிப்படையில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் இந்த வர்த்தக சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக சந்தையில் பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சர்ப்ராஸ் அஹமட் கான் சிப்ரா  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக சந்தை வெற்றி அளித்ததை தொடர்ந்தே மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த வர்த்தக சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளிப்பு!

இலங்கைக்கு 10 காவல்துறை வாகனங்களை வழங்கிய சீனா