உள்நாடுபிராந்தியம்

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் மரணமடைந்தார்.

குறித்த சம்பவம் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்த போது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் மரணமடைந்தார்.

சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், டிப்பர் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நீதிமன்றம் நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.

-சப்தன்

Related posts

விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் – பிரதமர் ஹரிணி

editor

மண்ணெண்ணெய்’காக வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor