உள்நாடு

யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயம்

(UTV | கொழும்பு) -யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையே வீதியோரத்தில் நின்ற யானை தாக்கியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யானை தாக்கி முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

Related posts

கொரோனா தொற்று – அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 16ஆவது இடம்

400 இற்கும் அதிக போலி எஞ்சின், செஸி உடன் ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள் – சந்தேகநபர் கைது

editor

கொழும்பில் மற்றுமொரு பகுதி விடுவிக்கப்பட்டது