உள்நாடு

மேல் மாகாணம் தவிர்ந்த பாடசாலைகள் நாளை திறப்பு

(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் நாளை(11) திறக்கப்படவுள்ளது.

அதன்படி, தரம் 02 முதல் தரம் 13 வரையான வகுப்புக்களுக்கு கல்விச் செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற சுந்தரலிங்கம் பிரதீப்

editor

இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து IMF மீளாய்வு

வசந்த முதலிகே குருந்துவத்தை பொலிஸாரினால் கைது!!