உள்நாடு

மூன்று விவசாயிகளின் உயிரினை பறித்த மின்னல்

(UTV | முல்லைத்தீவு) – முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் நேற்று(15) மாலை உயிரிழந்தனர்.

தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் கடும் மழையு பெய்துள்ளதுடன், மின்னல் தாக்கமும் ஏற்பட்டிருந்தது.

இதன்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

குமுழமுனை மேற்கு, குமுழமுனை மத்தி, வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதான ஆண்கள் மூவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Related posts

அடுத்த 06 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் புயல்

editor

மலையகம் 200 நிகழ்வு தவறென கருதினால், நடைபயணமும் தவறுதான் – ஜனாதிபதி சந்திப்பின் பின் ஜீவன்

வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முக்கியமான பணி – அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை – ஜனாதிபதி அநுர

editor