உள்நாடு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறிக்கு விடுதலை

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசேட மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஹேமசிறி பெர்ணான்டோ மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து, அவரை விடுவித்து விடுதலையாக்க விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 6 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

காணாமற் போனார் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை!

ராஜகிரிய விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி