முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) காலை ஓமான் புறப்பட்டார்
அங்கு நடைபெறும் ‘இந்தியப் பெருங்கடல்’ சிறப்பு மாநாட்டில் விருந்தினர் பேச்சாளராகப் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கிறார்.
இந்த மாநாட்டை இந்திய அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.
புதன்கிழமை நாடு திரும்பவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.