அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு மீண்டும் பிணை

மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (9) அனுமதியளித்துள்ளது.

முன்னதாக லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் பதிவு செய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த வியாழக்கிழமை (5) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து, மறுநாள் 6ஆம் திகதி மீண்டும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தொன்று தொடர்பாக கொள்ளுப்பிட்டியில் வைத்து லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.

கைதான லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related posts

டீசல் தட்டுப்பாடு : ஸ்தம்பிக்கும் பேரூந்து, ரயில் சேவையில் சிக்கலில்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளத்தை வழங்க முடிவு

கொழும்பு துறைமுகத்திற்கு 553 மில்லியன் டொலர் முதலீடு – அமெரிக்க தூதரகம்.