அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸிடம் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு!

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வாக்கு மூலமளிப்பதற்காக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (31) ஆஜராகியிருந்தார்.

இதன்போது, டிரான் அலஸிடமிருந்து 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

Related posts

“ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகை : நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை” அமைச்சர் கஞ்சன

டயானா’வுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

மஹிந்தவின் உறுப்புரிமை மஞ்சுல லலித் வர்ணகுமாரவுக்கு