இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேற்படி பகுதிகளுக்கு மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.