உள்நாடு

மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை

கடந்த 2004 உலகை தாக்கிய சுனாமி பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வும் இன்று (26) காலை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் பள்ளிவாசலின் பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் நடைபெற்றது.

சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் உலமாக்கள், மாளிகைக்காடு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், ஆலோசகர் ஐ. இஸ்திகார் உட்பட நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

எந்தவொரு தருணத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை – முஜிபுர் ரஹ்மான் கேள்வி பதில் கூறிய பிரதமர் ஹரினி | வீடியோ

editor

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு இடமாற்றம்