வகைப்படுத்தப்படாத

மருத்துவ தாதிமார்கள் இன்றும், நாளையும் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UDHAYAM, COLOMBO) – மருத்துவ தாதிமார்கள் இன்று மற்றும் நாளைய தினங்களில் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

அரச சேவையாளர்களின் ஒன்றிணைந்த தாதிமார் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

சுகயீன விடுமுறையின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வேதன கொடுப்பனவு, மேலதிக கொடுப்பனவு, வருடாந்தம் வழங்கப்படுகின்ற சீருடை கொடுப்பனவு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், அரசியல் பின்னணியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்திற்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லையென அரச தாதிமார் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதியாக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுப்பு – ஹொங்கொங் அரசாங்கத்துக்கு கண்டனம்!

கால நிலை சீர்கேடு அதிகபனிமூட்டம் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை