உள்நாடு

மன்னார் காணி சர்ச்சை – பெண்ணுக்கு எதிராக அமானி CIDயில் முறைப்பாடு

மன்னார் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளை அபகரிப்பு செய்வதாக நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பினை வைத்து மன்னார் பேசாலையினை சேரந்த பிரிதர்ஷனி ரொட்ரிகோ என்ற பெண் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு எதிராக சேக் ரிசான் முஹம்மத் அமானி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமது சட்டத்தரணி அயிஸ்மன்த கயான் சகிதம் இன்று மாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்த சேக் ரிசான் முஹம்மத் அமானி இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –

மேற்படி பெண்மனியின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, எனது தந்தை காணி கொள்வனவு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவருகின்ற ஒருவராக இருந்தார்.

நான் கடந்த 10 வருட காலமாக மேற்படி தொழிலினை செய்துவருகின்றேன். என்னுடைய நேர்மையான தொழில் முன்னேற்றத்தினை சகித்துக் கொள்ள முடியாத சிலர் இவ்வாறு எனக்கு எதிராக சமூக வளைத்தளங்களில் போலி பிரசாரங்களை செய்துவருகின்றார்.

இது தொடர்பில் இன்றைய தினம் நான் எனது சட்டத்தரணி சகிதம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளேன்.

இதற்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

உண்மை, நேர்மை நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

குற்றப் புலனாய்வு திணகைகளம் இது தொடர்பில் எனக்கு நியாயத்தை பெற்றுதரும் என்றும் அமானி இதன் போது கூறினார்

Related posts

புதிய இராணுவத் தளபதி நியமிப்பு

editor

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு

editor

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு