அரசியல்உள்நாடு

மனோ கணேசன் எம்.பியை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

இனப்பிரச்சினை தீர்வுக்கான நகர்வு, அதிகார பகிர்வு, மலையக பெருந்தோட்ட காணி உரிமை,

சட்டத்தின் ஆட்சி, பொருளாதார சவால்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய தலைப்புகளின் கீழ் இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு வரவிருக்கும் புதிய சுற்றறிக்கை!

ஈரான் ஜனாதிபதியின் விமானத்தால், கட்டுநாயக்காவில் ஏற்பட்ட குழப்பம்

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்