சூடான செய்திகள் 1

மதவாச்சி – அனுராதபுரம் வீதியில் கோர விபத்து ; மூவர் பலி

(UTVNEWS | COLOMBO) -அனுராதபுரம் – மதவாச்சி பிரதானவீதியின் வஹமளுகொள்ளேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் திசையில் பயணித்து அதிசொகுசு பேருந்து ஒன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

காங்கேசன்துறை சென்ற உத்தரதேவி

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்

ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசார தேரர்