உள்நாடு

போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் 

(UTV | கொழும்பு) –  போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் 

நேற்று (06) கட்டான பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் சோதனையின் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியதுடன், சம்பவத்தில் காயமடைந்த அதிகாரி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்த 6 கிராம் ஹெரோயின் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிள்ளையான் கைது – காரணம் வெளியானது

editor

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை

ஞாயிறு, திங்களன்று நாடளாவிய ரீதியாக ஊரடங்கு