உள்நாடுசூடான செய்திகள் 1

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

(UTV|புத்தளம்) –  புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(19) காலை 8 மணிக்கு நீக்கிக்கொள்ளப்படவுள்ளது

இதேவேளை, குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (18) மாலை 4.30 மணி முதல் புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச வைத்தியசாலைகளுக்கு ஆபத்து – துண்டுக்கப்படும் மின்

நுவரெலியாவில் இரு சிசுக்களின் சடலங்கள் மீட்பு

பிசிஆர் – ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மட்டு