சூடான செய்திகள் 1

பொதுநலவாய அமைப்பு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு

(UTV|COLOMBO)-இலங்கையில் நிலவிய அரசியல் நெருக்கடி நிலைமையை அமைதியான முறையில் தீர்க்க முடிந்தமை குறித்து பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லாண்ட் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அதேபோல் , இந்நாட்டு அரசியல் நல்லிணக்கம் , அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை எதிர்ப்பார்த்து தொடர்ந்தும் ஆதரவளிக்க தயாராக உள்ளதாக அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் , பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து தனது வாழ்த்துக்களையும் பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதில் , இந்நாட்டு ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மை குறித்த தனது மகிழ்ச்சியை வௌிப்படுத்தியுள்ள அவர் , இலங்கை மற்றும் பொதுநலவாய  செயலகத்திற்கு இடையிலான உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

 

 

 

 

 

Related posts

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 18 மணி நேர நீர் வெட்டு

ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் பிரஜை ஓருவர் கைது

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை