அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை) 2,088 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 475 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,558 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 500 இற்கும் மேற்பட்டோர்

கரையை கடக்கும் புயல் – விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

editor

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு பதவி உயர்வு