உள்நாடு

பேரூந்துகளை கண்காணிக்க 50 குழுக்கள்

(UTV|கொழும்பு) – பேரூந்துகளில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக 50 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் செயல்படும் வகையில் இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், 250 உறுப்பினர்களை உள்ளடக்கி இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பேரூந்துகளில் பாடல்களை இசைப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor

எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 115 அமெரிக்க டொலர்களை எட்டும்

சர்வதேச ஜம்போ பீனட்ஸ் இனி இலங்கையில் இல்லை