உள்நாடுவணிகம்

பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) –தோட்டப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் பேக்கரி உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் பேக்கரி உற்பத்தி உணவுவகைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்குச்சட்டம் காரணமாக மக்களின் உணவுத்தேவையின் ஒருபகுதியாக பேக்கரி உற்பத்தி உணவுப்பொருட்களை அவர்களுக்கு இலகுவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

Related posts

பிரதமரின் ஊடகப் பேச்சாளராக பிரேம்னாத் நியமனம்

பேஸ்புக்கில் வெள்ளைக் கொடி – உயிரை மாய்ந்த நபர்

இலங்கை வாலிபர் ஜப்பானில் கைது